ஞாயிறு, 28 மார்ச், 2010

ராபின் ஷர்மா



தனி மனித மேம்பாடு, தலைமைப் பண்புகள்,
மனித உறவு மேம்பாடு, குழந்தை வளர்ப்பு
இன்ன பிற வாழ்வியல் சிந்தனைகள் குறித்து
மிகவும் வசீகரமாய்ப் பேசும்,எழுதும்
பலர்களில் ராபின் ஷர்மா கவனிக்கப்
பட வேண்டியவர்.

Julian Mantle அமெரிக்காவின் மிகப்
பிரபலமான வக்கீல். கொண்டாட்டமான
இவரது வாழ்க்கை திடும்மென
சிதிலமடைகிறது.
இவரது கண்ணெதிரே
மகள் விபத்தில் மரிக்கிறார்.
மனைவி பிரிகிறார்.
வாதாடிக்கொண்டிருக்கும் போதே
Heart Attack.
நீதிமன்றத்துக்குள்ளேயே
நினைவிழக்கிறார்.
அதன் பின் நடந்தவை
அனைத்தும்
ஆச்சரியமான அற்புதம்.
தான் மிகவும் நேசித்த
FERRARI கார்,மாளிகை,
சொந்தமான தீவு
அனைத்தையும் விற்று விட்டு
இந்தியா நோக்கிப்
பிரயாணிக்கிறார்.
பல இன்னல்களுக்குப் பிறகு
Himalayas அடைந்து
கற்ற வாழ்வியல்
சிந்தனைகளை
அனைவருக்கும்
சொல்லிதருகிறார்.

அந்தப் புத்தகங்கள் :

THE MONK WHO SOLD HIS FERRARI
THE GREATNESS GUIDE
THE GREATNESS GUIDE 2
DAILY INSPIRATION
MEGALIVING
LEADERSHIP WISDOM
DISCOVER YOUR DESTINY
WHO WILL CRY WHEN YOU DIE?

Publisher : JAICO BOOKS

காமம்

முதலில்
ஒரு மெல்லிய
கொசுவலையைப்
போலத்தான்
கவிழ்ந்தது.

பின்
எந்த நொடியில்
புலிக் கூண்டாய்
உரு மாறியதெனும்
புதிர் முடிச்சை
அவிழ்க்கும்
முயற்சியிலேயே
கரைந்துக்
கொண்டிருக்கிறதென்
வாலிபம்.

ஞாயிறு, 21 மார்ச், 2010

படிக்க



இந்த வார விகடனில்
‘கொட்டாய்’
சிறுகதை ரொம்ப
சுவாரசியமாய்
இருந்தது.
உம்மணாமூஞ்சிகளைக் கூட
உதடு பிரிக்கவைக்கும்
மெலிதான நகைச்சுவை.
ஷ்யாமின் ஓவியம்
வெகு பாந்தம்.
கதையாசிரியர்
’பரமு’க்கு வாழ்த்துக்கள்.

சனி, 20 மார்ச், 2010

எழுத்தாள நண்பர்கள்




ப்ரகாஷ்
நா.விச்வநாதன்
தஞ்சாவூர்க் கவிராயர்
சி.எம்.முத்து
ஹரணி
சுந்தர்ஜி
புத்தகன்
ரிஷபன்
கிருஷ்ணா
சுப்ரமண்யன் ரவிச்சந்திரன்
கேவிஎஸ்
கலைமணி
சீதளா

என் நண்பர்கள்
என்பதற்காக மட்டும்
சொல்லவில்லை.

இவர்களைத்
தேடி மூழ்கினால்
முத்துக்கள் நிச்சயம்.

வெள்ளி, 19 மார்ச், 2010

தாய் மண்ணே வணக்கம்



யாழினி
இல்ல.. வியாஸ்..வேத வியாஸ்
யாழினி
வியாஸ்
சரி.யாழினியும் வியாஸூம்
தாங்காதுப்பா. நாலு நாள்ல டெலிவரி.போகத்தான் வேணுமா
ஜஸ்ட். ரெண்டே நாள். வந்துடுவேன்
அவன் தோள் தொடப்பட்டது
தாடிக்காரன்
ஹலோ கேப்டன் ..எங்க தேசம் தொட்டாச்சு
தெரியும். ஏன் இப்படி செஞ்சீங்க
உங்க ஆள் 140 பேர். எங்க ஆள் 5 பேர்.வியாபாரம் balanced ஆ இல்லே
140 பேரும் விமானப் பயணிகள். ஆனா உங்க 5 பேர்
வாக்குக் கொடுத்தமாதிரி பயணிகளை இறக்கிவிட்டோம்ல.அந்த 5
பேரும் செயல் வீரர்கள்
அடுத்தவர் தேசத்தில் குண்டு வைப்பது வீரமா
பிரச்சினை
பேசித்தீர்க்கலாமே
எத்தனை வருஷமா
நாங்கள் உங்களை விட பலசாலிகள்
உங்கள் விமான நிலைய அதிகாரிகள் மூன்று பேருக்கு
லஞ்சம். எவ்வளவு தெரியுமா? இது உங்கள் பலவீனம்
சரி. அடுத்து என்ன
நாங்கள் இறங்கியதும் உன்னை அனுப்பிடுவோம்
வெளியே ஆரவாரக் கூச்சல்
என்ன
அதோ அந்த உயரமானக் கட்டிடத்தைப் பார்
ம்
எங்கள் தலைமைச் செயலகம். அதிபர்,முக்யமந்திரிகள்,
செயல் வீரர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் கணத்தில் கேப்டன் துருவன் முடிவு செய்தான்.
விமானம் தாழ்ந்து மிக வேகமெடுத்தது.
ஏய்.. என்ன செய்றே
நாற்பதாவது நொடியில் விமானம்
பலத்தச் சப்தத்துடன் அந்தக் கட்டிடத்தைத் தீண்டியது.

உரு மாற்றம்



துளசி
மருதாணி
செம்பருத்தி
நந்தியாவட்டை
சரக்கொன்றை
நெல்லி
முருங்கை
வாழை
கிணற்றங்கரை
துவைக்கும் கல்
இளஞ்சிவப்புக் குருவி
அணில் குஞ்சு
வண்ணத்துப்பூச்சி.
அம்மாவை
ஞாபகப்படுத்தும்
அத்தனையையும்
இழந்து
வெறுங்கட்டிடமாய்
நிற்கிறதென் வீடு.

புதன், 17 மார்ச், 2010

5 கேள்விகள்








1. இழப்பு உறுதி என்று தெரிந்து தானே
அரசு Nuclear Damage Bill க்கு
ஒப்புதல் அளிக்கத்துடிக்கிறது ?

2. மகளிர் மசோதாவால் மிகவும்
பயனடையப் போவது மகளிரா?
ஆடவரா?
3. அடிப்படைக் கல்வி குறித்து
விவாதிக்கப்படாமைக்குக்
காரணம் எல்லோருடையக்
குழ்ந்தைகளும் படித்து முடித்து
வேலையில் சேர்ந்து விட்டார்களா?

4. புதிதாக மதம் மாறுபவர்கள்
தாய் மதம் குறித்து ஆக்ரோஷமாய்
விமர்சனம் எழுப்புவது ஏன்?

5. அன்று Memonto வின் xerox
Ghajini.
இன்று Chetan Baghat ன் Xerox
3Idiots.
பிறர் உழைப்பைத் திருடலாமா
Mr.AmirKhan?

செவ்வாய், 16 மார்ச், 2010

chatல் வந்தவர்




ஐயா உம்ம பெயர் என்ன?
நான் நிறைய பெயரால் அழைக்கப்படுபவன்.
சரி. எதாவது ஒன்றைச் சொல்லும்?
வேண்டாம். அடையளம் தெரிந்து விடும்.
அப்ப எப்படிக் கூப்பிடுவது?
நீங்களே எனக்கு ஒரு பெயர் சூட்டுங்க.
ம்.ம்.ம்.
மத அடையாளம் இல்லாமல் ஒரு பெயர்.
உஷார் பார்ட்டிதான். சரி. திருவாளர். எக்ஸ்?
நல்லாருக்கு.
எங்கேப்பா இருக்க?
ஒவ்வொருத்தர் ஒரு இடம் சொல்றாங்க.
நீ சொல்லுப்பா.
என்னை நினைப்பவர் மனசில்.
கடவுள்னு நினைப்பா?
அப்படியே வச்சுக்கலாம்.
எத்தனை பேருய்யா இப்படிக் கிளம்பிருக்கீங்க?
கைவசம் கணக்கு இல்லே.
அப்புறம்?
வேலை ரொம்ப அலுப்பாயிடுச்சு.கொஞ்சம் relax
பண்ணிக்கத்தான் உங்க கிட்டப் பேசறேன்.
என்னாச்சு?
முன்னல்லாம் பாக்க மட்டும்தான் வருவாங்க. இப்ப
அது வேணும்.. இது வேணும்னு ரொம்ப
டார்ச்சர் பண்றாங்க.
உம்மள shopping mallனு நினைச்சிட்டாங்களா?
அப்டீன்னா?
அங்கே குண்டூசிலேர்ந்து ஏரோபிளேன் வரைக்கும்
கிடைக்கும்.
அதே.. அதே.
அப்புறம்?
உங்க பக்கம் என்னை மாதிரின்னு பல பேர் சொல்லிட்டுத்
திரியறதா கேள்விப்பட்டேன்.
யாரு?
உங்க அரசியல்வாதிகளைத்தான் சொல்றேன்.
சொல்லாதீர்யா. கேள்விப்பட்டா வந்து உம்மத்
தூக்கிடுவாங்க.
சரி. என் லைன்ல ஏதோ technical problem
போலருக்கு. சரியாக் காதுல விழல. அப்புறம் பேசலாம்.
உம்மளோட உண்மைப் பேரைச் சொல்லிட்டு வைப்பா.
@@##$$&&***
கடவுள்னு சொன்னமாதிரிதான் இருந்தது.

திங்கள், 15 மார்ச், 2010

புத்தகம்




என்
வாழ்வை
இது வரையிலும்
ரம்யமாய்
நகர்த்திக்
கொண்டிருப்பது
இந்த
நதிதான்.

விருப்பமான பத்து நாவல்கள்

01. அம்மா வந்தாள் - தி.ஜானகி ராமன்
02. அபிதா - லா.ச.ரா
03. காகித மலர்கள் - ஆதவன்
04. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்
05. தண்ணீர் - அசோகமித்ரன்
06. ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தரராமசாமி
07. ஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசரதி
08. சாயாவனம் - சா.கந்தசாமி
09. ஏழாம் உலகம் - ஜெயமோகன்
10. பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா

ஞாயிறு, 14 மார்ச், 2010

கெளதம் வாசுதேவ மேனனுக்கு ....

தாமதமாகத்தான் ”விண்ணைத்தாண்டி வருவாயா” ப்
பார்த்தேன். சேட்டைச் செய்யாத சிம்புதான் படத்தின்
தரத்திற்கான சான்றாய் அனைவராலும் சொல்லப்படுவது
ஆச்சரியமூட்டுகிறது .
காதலும் காதலைச் சார்ந்த வலியும் எப்போதும்
சுவாரசியம் தான். ஆனால் ஒரு நல்ல படத்திற்கான
தகுதி அதுமட்டுமல்ல என்பது மேனனுக்கு
தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
காதலுக்கு மதம் தடை என்பது அரைத்து அரைத்துப்
புளித்துப் போன கரு.
இது இன்னமும் காதலர்களுக்கு நடந்துக்
கொண்டுதானிருக்கிறது எனும் சால்ஜாப்புகளைத்
தவிர்த்து விட்டுதான் பார்க்கவேண்டியிருக்கிறது.
கதை சொல்லும்விதம், படமாக்கும் விதம்,
வசனம் இன்னபிற விஷயங்களில்
செலுத்தும் புதுமையை
கதையிலும் காட்டலாம்.
பாராட்டப் பட வேண்டிய விஷயம்
கதைக்கு உதவியான
photography.
மேனனுக்கும் ஹாரிஸ் ஜெயராஜுக்கும்
இருந்த chemistry இந்த கூட்டணியில்
missing.
கடைசியாய் ஒன்று.
இரண்டு climax எடுத்திருந்தது
உண்மையென்றால்
சொல்லும் கதைக்கு அது
நேர்மையாகுமா?

புதன், 10 மார்ச், 2010

BOOKS

நல்ல புத்தகங்களைப் பழையப் புத்தகக் கடைகளில்
முன்பு பார்த்தால் மிகவும் சந்தோஷமாய் இருக்கும்.
இப்போது பார்த்தால் மிகவும் வருத்தமாய் இருக்கிறது.
காரணம் வயது ஏறிக்கொண்டிருப்பது மட்டுமல்ல.
தேடித் தேடி நாம் சேர்த்தப் புத்தகங்களுக்கும் இந்தக்
கதி தானோ என்ற பயமும் கூட.
நம் குழந்தைகள் இந்தப் புத்தகங்களை பாதுகாப்பார்களா?
அவர்களுக்குப் படிப்பதற்கான ஆர்வத்தை எப்படி
உண்டாக்குவது?
பள்ளிக்கூடங்கள் சகல வித்தைகளும் சொல்லித்
தருவதாய் அறிவிக்கிறார்கள்.
ஆனால் படிக்கும் பழக்கத்தை உண்டாக்குவது போல்
தெரியவில்லை. சகலத்தையும் பள்ளிதான்
சொல்லித் தரவேண்டுமா?
நம்மால் முடியாதா?
கேள்விகள் தலையைச் சுத்த வைக்கின்றன.
படிப்பு நம்மை எவ்வளவு மென்மையாகவும்,
மேன்மையகவும் ஆக்கியிருக்கிறது என்பதை
நம்மால் உணர முடிகிறது. ஆனால் அதை
எப்படி குழந்தைகளுக்குப் புரிய வைப்பது?
Spider man, Hulk, video games இன்ன பிற
சமாச்சாரங்களை புத்தகங்கள் எப்படி
வெல்லப் போகின்றன?
புத்தகங்களின் வெற்றிக்காய்ப்
பிரார்த்திப்போமாக.

செவ்வாய், 9 மார்ச், 2010

OSCAR

AVATAR படம் பார்க்கும் போது பிரமிப்பு மட்டுமே
ஏற்பட்டது. அது தொழில் நுட்பத்தால் ஏற்பட்ட
பிரமிப்பு. ஒப்பிடுவது சரியில்லை என்றாலும்
TITANIC பார்த்தபோது ஏற்பட்ட நெகிழ்வு இதில்
இல்லை. ஆனால் அனைத்து பத்திரிக்கைகளும்
உச்சக்கட்ட புகழ்ச்சியை அவதாருக்கு வழங்கின.
ஆகச் சிறந்த படம் இதுவென தீர்ப்பு வழங்கின.
மனசுக்கு நெருடலாய் தான் இருந்தது.
Oscar Result தெரிந்ததும்தான் அது விலகியது.
KATHRYN BIGELOW தன்னுடைய
THE HURT LOCKER க்காய் சிறந்த டைரக்டர் மற்றும்
சிறந்த படத்திற்குமான விருதைப் பெற்றிருக்கிறார்.
இவ்விருது பெற்ற முதல் பெண்மணி இவரே.
மகளிர் தினத்தில் விருது கிடைத்தது சிறப்பு.

THE HURT LOCKER நகரமும் இல்லாத கிராமமும்
இல்லாத எஙகளூருக்கு எப்போது வரும் என்று
தெரியாத சூழலில் படத்துக்குச் சம்பந்தமில்லாச்
செய்தி ஒன்று சொல்லவேண்டியுள்ளது.

இப்போட்டியில் தோல்வியடைந்த அவதார்
டைரக்டர் JAMES CAMERON ன் முன்னாள்
மனைவிதான் KATHRYN BIGELOW.

இதுதான் POETIC JUSTICE என்பதா?

திங்கள், 8 மார்ச், 2010

10+2 = A Nightmare

+2 தேர்வுகள் ஆரம்பமாகி விட்டன.

பின்னிரவின் கடுங் கனவிலிருந்து
கதறிக் கொண்டு விழித்தெழும்
குழந்தையைப் போன்ற நிலையில்
மாணவ மாணவியர்கள்.

என்னாலதான் முடியல.
நீயாவது செய்.
என்னால் பிடிக்கமுடியயாத
CAT ஐ நீயாவது பிடி.
பெற்றோர்களின்
MIDDLE CLASS மனோபாவம்.

இது வரை சுமந்து வந்த
பாறாங்கல்லின் இறுதி அழுத்தம்.
LAST CRUCIFIXION.

என்ன செய்வார்கள் நம் குழந்தைகள்?

வீட்டுக்கொரு மரம்.
அது போல்
வீட்டுக்கு ஒரு Engineer
திட்டம் ஏதாவது அமுலில் உள்ளதா?

எங்களூர் பக்கம்
நகைச்சுவையாய்
சொல்வது ஒன்றுண்டு.
நிறைய பணம் இருந்தால்
நர்சரி பள்ளி ஆரம்பிக்கலாம்.
கொஞ்சம் பணம் இருந்தால்
இன்ஜினியரிங் காலேஜ்
ஆரம்பிக்கலாம்.

நமக்குத் தேவை
பொறியாளர் & கம்ப்யூட்டர்
விற்பன்னர்கள் மட்டுமல்ல.

விவசாய நிபுணர்
பொருளாதார அறிஞர்
கவிஞர்
ஓவியர்
கலைஞர்
ஆடை வடிவமைப்பவர்
மருத்துவர்
செவிலியர்
இப்படிச் சொல்லிக் கொண்டே
போகலாம்.

குழந்தைகளின்
விருப்பத்திற்கேற்ற
கல்வி கிடைக்கட்டும்.

மதிப்பெண்களுக்கான
கல்வியாய் இல்லாமல்
மனசுக்கான கல்வியாய்
இருக்கட்டும்.

நம் குழந்தைகளை
நம்மிடமிருந்து
நாமேக் காப்பாற்ற
சூளுரைப்போம்
இந்த அனல் பறக்கும்
தேர்வு தினத்தில்.

ஞாயிறு, 7 மார்ச், 2010

மார்ச் 8

தினங்களைக் கொண்டாடுவதின்
பின்னணியில் உள்ள அரசியலை
புறந்தள்ளி விட்டுத் தான்
மகளிர் தினத்தினை
நாம் கொண்டாட வேண்டும்.

பெண்களிடமிருந்து
பெற்றவை
பெறுகிறவை
பெறப்போகிறவை
ஏராளம்.
பதிலுக்குக் கொடுத்தவை
மிகச் சொற்பமே.

அம்மா
சகோதரி
தோழி
மனைவி
மகள்
பேத்தி
இவர்களின்
பெருங்கருணையினால்
சூழப்பட்டது
நம் வாழ்வு.

இந்த தினத்தை நாம்
Thanks giving Day யாகக்
கொண்டாடி
நம் நன்றியை நவிலுவோம்.

வெள்ளி, 5 மார்ச், 2010

இலவசம்

மீண்டுமொரு சாமியாரின் கதை.
இந்த முறை 65 உயிர்கள் பலி.
எந்த ஒரு விபத்து என்றாலும்
முதல் பலி பெண்களும்
குழந்தைகளுமே. அத்தனை ஆண்களும்
உயிர் பயத்தில் ஓடி விடுகிறர்களா?
இலவசத்திற்காய் இத்தனை
உயிர் பலி. இலவசத்திற்காய்
பொருட்கள் வாங்கியது போக
உயிர்களைக் கொடுக்கிறார்கள்.
இலவசத்திற்காய் அலையும்
மனப்பாங்கிற்குக் காரணம்
வறுமை மட்டுமா? நம்
அரசாங்கமும்தான். இங்கே
இலவசமாய் கிடைக்க வேண்டிய
கல்வி, மருத்துவம் இன்ன பிற
அடிப்படை தேவைகள்
தொடமுடியாத உயரத்திற்கு
போய்விட்டன. அரசாங்கத்தைப்
பொறுத்தவரை
ALL ROADS LEAD TO ELECTION
BOOTH.
இது குறித்து நாம் யோசிக்க
வேண்டிய தருணமிது.
வறுமையிலும் செம்மை.
இதுவே வறுமையிலிருந்து
விடுபட வைக்கும்
GOLDEN RULE.

புதன், 3 மார்ச், 2010

சர்ச்சை

தனி மனிதர் கடவுளாக்கப் பட்டதின்
பின் விளைவுகளில் ஒன்றுதான்
நித்யாவின் முகமூடி கிழிக்கப் பட்டது.
சிலருக்கு அதிர்ச்சி.
சிலருக்கு கொண்டாட்டம்.
சமீபத்திய செய்தியான
மார்க்சிய தலைவரின்
தற்கொலையை விட
நித்யாவின் sex scandal
பொதுமக்கள் மத்தியில்
பிரபலமானதின்
பின்னணியில் ஏதேனும்
உளவியல் காரணம்
இருக்கக்கூடுமோ?
Do you have any justification
Mr.Sigmand Freud?