சனி, 29 ஜனவரி, 2011

புத்தகத் திருவிழா !



தஞ்சையில் BAPASI நடத்தும் புத்தகத்
திருவிழா. சந்தோஷமாய் உள்ளே
நுழைந்தேன்.
மிளகாய் பஜ்ஜி
ஸ்டிக்கர் பொட்டு
இன்ஜினியரிங் காலேஜ்
இரு சக்கர வாகனம்
நான்கு சக்கர வாகனம்
டைல்ஸ்
ஸ்போர்ட்ஸ் குட்ஸ்
அப்புறம்
புத்தகம்.
வெறுப்பைக் கிளப்பிட்டாங்க.
கேட்காமலே காரணம்
தெரிந்தது.
நம்ப ஊர்ல புத்தகம்
வாங்க ஆள் ஏது?
ஆன்மிகம்
வாஸ்து
சுய முன்னேற்றம்
ஆங்கில இலக்கணம்
ரமணி சந்திரன்
இந்திரா செளந்தர்ராஜன்
பாலகுமாரன்
சுஜாதா
இவைகளே
ஆக்ரமித்திருந்திருந்தன.
உயிர்மை பதிப்பகம்
ஸ்டால் போடவில்லை.
நிறைய புத்தகம் வாங்க
திட்டம் போட்டிருந்தேன்.
ஏமாற்றம்..ஏமாற்றம்.
வாங்கியது சொற்பமே.

புத்தம் வீடு - ஹெப்ஸிபா ஜேசுதாசன்
சங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்
பகல் கனவு - ஜிஜூபாய் பதேக்கா
அருந்ததிராய் கரண்தாப்பர் விவாதம்
CRIME AND PUNISHMENT - FYODOR DOSTOEVSKY
THE WHITE TIGER - ARAVIND ADIGA
LADY CHATTERLEY'S LOVER - D.H.LAWRENCE

இவை வாங்கியது போக பட்ஜெட்டில்
மீதமுள்ளது.
உண்மையான புத்தகத் திருவிழாவை
எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.

சனி, 22 ஜனவரி, 2011

பிடிக்காத பத்து பேர்

01. புத்தகம் படிக்கவே நேரமில்லையென
பெருமையாய் சொல்லிக் கொள்பவர்.
02. காதுகளுக்குள் பவுடர் அடித்துக்
கொண்டு வருபவர்.
03. பார்த்த அடுத்த நிமிடமே அரசியல்
பேச ஆரம்பிப்பவர்.
04. குழந்தைகளை ரைம்ஸ் சொல்லச்
சொல்லி நிர்பந்திப்பவர்.
05. எல்லோரையும் தோழரென விளிக்கும்
போலி புரட்சிக்காரர்.
06. இந்தக் காலத்துப் பசங்களுக்கு என்ன
தெரியுமென அங்கலாய்ப்பவர்.
07. ஆகச் சிறந்தவை அனைத்தும் நம்
மொழியில் மட்டுமே என வாதிடும்
தமிழ் அன்பர்.
08. அம்பானி அடுக்கு மாடி கட்டினாலும்,
டாட்டா பேட்டா வாங்கினாலும்
கொந்தளிக்கும் போராளி.
09. நேரில் பேசும் போது மேலாடையைத்
திருத்திக் கொண்டெ பேசுபவர்.
10. எதிர்படும் அழகான பெண்ணுடன்
வரும் அவரின் கணவர்.