திங்கள், 28 நவம்பர், 2011

ஒரு கேள்வி



பால் விலை.
பேருந்து கட்டணம்.
மின் கட்டணம்.

ஆகாசத்திற்கு உயர்த்திய
அம்மாவிடம்
ஒரு கேள்வி :

வொய் திஸ் கொலவெறி?

ஞாயிறு, 12 ஜூன், 2011

ஆரண்ய காண்டம்



வெள்ளித்திரையில் விரிந்த
ஆச்சர்யம்.
தியாகராஜன் குமாரராஜா
மிகவும் அற்புதமாய்
இயக்கியுள்ளார்.
சம்பத்.
சோமசுந்தரம்.
வசந்த்.
ஜாக்கிஷெரஃப்.
இந்த வரிசையில்
அசத்துகிறார்கள்.
யுவன் பாடல்கள்
இல்லாமலே
வசீகரிக்கிறார்.
வசனமும்,ஒளிப்பதிவும்
உயர் ரகம்.
இந்தப் படத்திற்கு
நாம் செய்யும்
நியாயம் இதைத்
தியேட்டரில்
பார்ப்பதுதான்.
தயாரிப்பு எஸ்.பி.பி.சரண்.
ஒரு பூங்கொத்து
அப்பாவுக்கும்,பிள்ளைக்கும்.

ஞாயிறு, 5 ஜூன், 2011

கதம்பம்

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்.
ஒரு செடி நடுவது.
ஒரு செடிக்கு நீர் ஊற்றுவது.
பெட்ரோல் வாகனத்தைத்
தவிர்ப்பது.
இதில் ஏதாவது
ஒன்றைச் செய்தல்
உகந்தது.

************************

பெற்றோர்கள்.
ஆசிரியர்கள்.
பள்ளிகள்.
மேலேச் சொல்லப் பட்ட
அனைவரும்
எதிர்ப்பதாலேயே
ஒரு விஷயம்
புரிகிறது.
சமச்சீர் கல்வி
ஒரு நல்ல
முயற்சியென.
மெக்காலேயின்
பாதிப்பிலிருந்து
நம் குழந்தைகளாவது
விடுபடட்டும்.

************************

மேற்கிந்தியத்தீவினை
T20 யில்
வென்றிருக்கிறோம்
பெரிய தலைகள்
ஏதுமின்றி.
ரஹ்மான் வந்தபின்
monopoly
தகர்ந்த மாதிரி
IPL
வந்தபின்
நிறைய
புது முகங்கள்.
கலக்குங்க
Rain ஆ.

************************

சமீபத்தில் தான்
திபெத்திய
படமான
சம்சாரா
பார்க்க முடிந்தது.
அதில் கதாநாயகி
கேட்கும்
கேள்விகள்
மனசுள் சுழன்று
கொண்டிருக்கின்றன.
“ சித்தார்த்தன்
தன் மனைவியையும்
மகனையும்
பிரிந்த பின்
புத்தனாக
அறியப்பட்டான்.
வரலாற்றின்
பக்கத்தில்
எங்காவது
யசோதரையும்,ராகுலும்
நினைவுகூரப்படுகிறார்களா?
யசோதரை
சித்தார்த்தனையும்
ராகுலையும்
ஞானத்தேடலுக்காய்ப்
பிரிந்திருந்தால்
அவள்
எவ்விதம்
ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பாள்?”
பதில்
சொல்ல முடியாதக்
கேள்விகள்.

*************************

திருநெல்வேலியைச்
சேர்ந்த ஆறாம் வகுப்பு
மாணவி விசாலினி
சிஸ்கோ,மைக்ரோசஃப்ட்
நிறுவனங்கள்
நடத்தும் ஆன்லைன்
தேர்வுகளில் ஒன்றான
CCNA தேர்வினை
எழுதி வெற்றி
பெற்றிருக்கிறார்.
இதில் வெற்றி பெற
பிடெக்,எம்சிஏ
படித்தவர்களே
திணறுவார்கள்
என்பதே செய்தி.
இதுபோல
இந்தத் தேர்வினை
இதற்கு முன்பு
பாகிஸ்தானைச் சேர்ந்த
12 வயது சிறுவன்
எழுதி வெற்றி
பெற்றிருக்கிறான்.
அவனை அங்கே
Proud of Pakistan
என்று
கொண்டாடினார்கள்.
இங்கே
விசாலினியை
உயர்கல்வி
பயிலச்
சேர்த்துக் கொள்ள
நம் சட்டங்கள்
மறுக்கின்றன.

புதன், 1 ஜூன், 2011

Rich Dad Poor Dad


மனித வாழ்வில்
பணம் மட்டும்
போதும்.

பணமே
தேவையில்லை.

மேலே சொல்லப்
பட்ட ரெண்டு
வெவ்வேறு
சித்தாந்தங்களைப்
பின்பற்றுபவர்களுக்கு
இந்தப் புத்தகம்
தேவையில்லை.

உடல் நலம்
மனநலம்
குறித்த
கையேடுகள் போல்
பணநலம்
குறித்த கையேடு
இது.

ஒவ்வொரு
பெற்றோர்களூம்
தங்கள்
குழந்தைகளுக்கு
அறிமுகப்
படுத்த வேண்டிய
புத்தகங்களில்
இதுவும்
ஒன்றெனக்
கொள்ளலாம்.

Go to school,get good
grades,and look for a
safe,secure job.

இன்ன பிற
நடுத்தர வர்க்கச்
சிந்தனைகளைத்
தகர்க்கும்
வல்லமை
கொண்ட
புத்தகம்.

By

Robert T.Kiyosaki

with

Sharon L. Lechter.C.P.A.

சனி, 21 மே, 2011

விருதுகள்







சிறந்த திரைப்படங்களுக்கும்
அதன் ஆக்கத்தில் துணை
நின்றவர்களுக்கும்
தேசிய அளவில் அங்கீகாரம்
கிடைத்துள்ளது.
தமிழ் படங்கள் அதில்
முன்னணியில்
நிற்பது மிகவும்
சந்தோஷமான விஷயம்.
பல தலைகளுக்குக்
கிடைக்காத
சிறந்த இயக்குனர் விருது
இரண்டாவது படத்திலேயே
வெற்றிமாறனுக்குக்
கிடைத்திருக்கிறது.
குருவுக்கேற்ற(பாலுமகேந்திரா)
சிஷ்யன்.

புதன், 11 மே, 2011

புதிய பூ



வடக்கு காஷ்மீரில் இஸ்லாமியர்கள்
பெரும்பான்மையாக வசிக்கும்
உஸ்ஸன் என்ற கிராமத்தில்
நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில்
முதன் முறையாக ஆஷா ஜீ என்ற
காஷ்மீரீ பண்டிட் வகுப்பைச்
சேர்ந்த பெண்மணி தேர்ந்தெடுக்கப்
பட்டிருக்கிறார். அவரை எதிர்த்து
போட்டியிட்டவர் சர்வா பேகம்
என்னும் இஸ்லாமியர்.
தேர்தல் முடிவு வெளியாகியதும்
இஸ்லாமியர்களும்,இந்துக்களும்
ஒன்று கூடி அவருக்கு வாழ்த்து
தெரிவித்திருக்கிறர்கள்.அவரை
எதிர்த்துப் போட்டியிட்ட
பெண்மணி உட்பட.
மற்ற பிரதேசத்தில்
நடந்திருந்தால் இது ஒரு
சாதாரண விஷயம்.
அரசியல்வாதிகளாலும்,
மதவாதிகளாலும் எரிந்து
கொண்டிருக்கும் காஷ்மீரில்
பூத்திருக்கும் முதல் பூ
இதுவெனச் சொல்லலாம்.
எப்போதும் விடியல்
மெலிதான கீற்று போலத்தான்
ஆரம்பமாகிறது.

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

திமிர்



Chennai school urges parents to protest against RTE

Admitting poor students may bring down discipline and the quality of education and also demoralize teachers, says Sri Sankara Senior Secondary School. In a circular issued to students by the Adyar-based school, principal Subala Ananthanarayanan has linked a student's performance to his/her economic status and asked parents to protest against the Right To Education Act.

The circular said that under the Act, the school would have no choice but to admit students from poor families, which would pull down its standards. Ananthanarayanan urged parents to "protest and fight" against the Act. Suggesting that the state's decision to implement it from the coming year could force the school to increase fees, she asked parents to appeal to the state and the Centre not to implement the Act in its present form.

The law makes it obligatory on the state governments and local bodies to ensure that every child gets education in a neighbourhood school. The district education officer can admit 25% of poor children living nearby to any private school as per the Act. According to it, if a child around nine years old has never been to school, he/she must be admitted to the fourth standard after some training. The schools cannot refuse admission, and must provide education free of cost.

"These rules will be damaging to the class and the entire school, and therefore to your child's education," the circular said.

The circular says that the act should not be implemented as it denies the school the powers to discipline or detain a child and choose the medium of education. The school states that it would be under constant legal threat and harassment from government. "All this will make all schools perform exactly like government schools in quality and discipline. Is this why we have admitted our children in this or any good school?" the circular asks.

It tells parents that their quality of education will suffer as teachers will have a difficult time managing and educating a few children, who are not qualified for the particular class, or who are very difficult to manage.
"Most of the teachers' attention, time and energy will go toward educating and managing these children, as the school and teacher are held responsible, under the act."

படித்தவுடன் மனம் பதறியது.
அம்பானி,டாட்டா,பிர்லா,மிட்டல்
இவர்களுடன் ஒப்பிடும்போது
நாம் அனைவரும் ஏழைகள்
தான். மேலே சொல்லப்பட்ட
பள்ளி பிரின்சிபால் உட்பட.
எல்லோரையும் தேசத்தை
விட்டு விரட்டிவிடலாமா
சுபலா அவர்களே?

திங்கள், 25 ஏப்ரல், 2011

எண்டோசல்ஃபான் எனும் உயிர்க்கொல்லி


எண்டோசல்ஃபான் என்னும் பூச்சிக் கொல்லி
மருந்து உபயோகத்தில் உள்ளது. குறிப்பாக
முந்திரி மரங்களுக்கு அடிக்கப் படுகிறது. இதன்
பின்விளைவுகள் மிகப் பயங்கரமாக இருக்கிறது
என்பதற்கு நிறைய உதாரணங்கள் கிடைக்கின்றன.
கேரளவில் இதன் பாதிப்பு அதிகம்.
கேரள அரசு இதற்கு தடை விதித்துள்ளது.
கர்னாடக அரசும் கூட. ஏறக்குறைய
நாலாயிரம் பேர் இதனால் இறந்திருப்பார்கள்.
குழந்தைகள் மிகக் கொடூரமாகப்
பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். மார்பகப்
புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள்
உண்டு என நிரூபிக்கப் பட்டுள்ளது.
இது நம் தேசமெங்கும் தடை செய்யப்
படாவிட்டால் இது மற்றொரு போபால்
துக்கமாய் மாறக் கூடும் என்பது இன்று
மிகையாய்த் தோன்றலாம். 63 நாடுகள்
இதற்கு தடை விதித்துள்ளன.
இதனை தேசமெங்கும் தடை விதிக்கக்
கோரி நேற்று கேரள முதல்வர் ஒரு அடையாள
உண்ணாவிரதம் இருந்தார். அதில் அரசியல்வாதிகள்
மட்டுமல்லாது கலைஞர்கள்,தொண்டு நிறுவனங்கள்
என அனைத்துத் தரப்பினரும் கலந்து
கொண்டுள்ளார்கள். நேற்று ஜெனிவாவில்
“Stockholm Convention on Persistent
Organic Pollutants" ஆரம்பமாகியுள்ளது.
இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால்
இதற்கு உலகத் தடை விதிப்பதை
ஒத்தி வைக்கும்படி இந்தியா வேண்டுகோள்
விடுத்துள்ளது. தேசமெங்கும் ஒருமித்தக்
கருத்து ஏற்பட்ட பின்புதான் இது குறித்து
யோசிக்க வேண்டுமென நமது பிரதமர்
கூறியுள்ளார். அதாவது தேசமெங்கும்
இதனால் மிக அதிக அளவில் பாதிக்கப்
பட்டதாக அவர் நம்பும் பட்சத்தில்.
தமிழ்நாட்டில் இது குறித்து செய்தியில்லை.
முதல்வருக்கு சொந்தக் கவலை.
நமக்கும் கூட.

வெள்ளி, 11 மார்ச், 2011

மாற்று வழி

தேர்தல் வருகிறது.
கண் முன்னே இரண்டு கட்சிகள்.
ஒன்று

மற்றொன்று

தோழர்களோ
அம்மாவிடம்
துண்டு ஏந்தி
நிற்கிறார்கள்.
வாழ்வதற்கு
ஏதேனும்
வழி கிடைக்குமா
ரஜினி மற்றும்
விஜய்
அவர்களே?

திங்கள், 7 மார்ச், 2011

சாருலதா



மீண்டும் ஒரு முறை
சத்யஜித்ராயின்
சாருலதாவைப்
பார்க்கும்
சந்தர்ப்பம்
வாய்த்தது.
இந்த முறை
சப் டைட்டிலுடன்.
கத்தி மேல் நடையல்ல;
கத்தி மேல்
ஓடியிருக்கிறார்
ராய்.
இயக்குனரின்
விரல்களுக்கு
முத்தமிடும்
ஆசை மேலிடுவதைத்
தவிர்க்க முடியவில்லை.
எல்லா ஆசைகளும்
நிறைவேறி
விடுகிறதா என்ன?

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

கடுப்பு

01. பயணம் படத்தில் விமானத்தைக்
கடத்துபவர்களை முஸ்லீம்களாகவும்,
பாகிஸ்தானிலிருத்து வருபவர்களாகவும்
காட்டியிருப்பது.
நீங்களுமா ராதாமோகன்?

02. கலைஞரின் ஆட்சிக்காலம்
தமிழர்களின் பொற்காலமென
தமிழக அரசு விருது வழங்கிய
விழாவில் ஜெயகாந்தனின்
பாராட்டு.
நீங்களுமா ஜெயகாந்தன்?

03. திருவண்ணமலை கோவில்
நிர்வாகம் பிரசாதம் தயாரிப்பதற்கு
கூட பிராமணர்கள் மட்டும்
தேவையென ஒரு விளம்பரம்
செய்துள்ளது. அதை சென்னை
உயர்நீதிமன்றமும்
அங்கீகரித்துள்ளது.
நீங்களுமா நீதி தேவதையே?

சனி, 12 பிப்ரவரி, 2011

சிறந்த சிறுகதைகள்



அறம்.
சோற்றுக்கணக்கு.

சமீபத்தில் படித்ததில்
என்னை மிகவும்
நெகிழவைத்த
சிறுகதைகள்.

ஜெயமோகன் அவரது
இணைய தளத்தில்
எழுதிய கதைகள்.

நல்ல கதைகளைத்
தேடிப் பிடித்து
வாசிப்பவர்கள்
அனைவரும்
படிக்க வேண்டியவை.

http://www.jeyamohan.in

புதன், 2 பிப்ரவரி, 2011

If I rise...



[Dido:]
In your life, you’re mad
In your car, you're sad
O' your taller now I've found
Hold your fire course
O' your fallen out
Go and sow your courses

[A R R:]
If I rise, they are on my drive
If I believe, it's more than it is
More than it is

[Dido:]
If I rise, one more chance
All our dreams, more than this
O' your taller now I've found
Hold your fire course
O' your fallen out
Go and sow your courses

[A R R:]
If I rise, they are on my drive
If I believe, it's more than it is
It's more than it is

[Chorus:]
If I thought I wanted more
Get the life more
Just one more call
Though I've never lost
Believe I don't care
Never again

[A R R & Dido:]
If I rise, they are on my drive
If I believe, it's more than it is
It's more than it is

[Chorus:]
If I thought I wanted more
Get the life more
Just one more call

[Dido:]
If I believe, there's more than this
Anymore than this

டேனிபாயல் இயக்கத்தில்
வந்திருக்கும் 127 Hours -ல்
ரஹ்மான், டிடோவுடன்
இணைந்து பாடியிருக்கும்
பாடல் இது.
லிரிக்ஸ் புரிந்து கேட்டால்
மிக அற்புதம்.
கோரஸ் அதி உன்னதம்.
இந்த வருடமும்
ஓர் இந்தியருக்கு
ஓரிரு ஆஸ்கார்
வசப்படுமா?
நம்பிக்கை..நம்பிக்கை.

சனி, 29 ஜனவரி, 2011

புத்தகத் திருவிழா !



தஞ்சையில் BAPASI நடத்தும் புத்தகத்
திருவிழா. சந்தோஷமாய் உள்ளே
நுழைந்தேன்.
மிளகாய் பஜ்ஜி
ஸ்டிக்கர் பொட்டு
இன்ஜினியரிங் காலேஜ்
இரு சக்கர வாகனம்
நான்கு சக்கர வாகனம்
டைல்ஸ்
ஸ்போர்ட்ஸ் குட்ஸ்
அப்புறம்
புத்தகம்.
வெறுப்பைக் கிளப்பிட்டாங்க.
கேட்காமலே காரணம்
தெரிந்தது.
நம்ப ஊர்ல புத்தகம்
வாங்க ஆள் ஏது?
ஆன்மிகம்
வாஸ்து
சுய முன்னேற்றம்
ஆங்கில இலக்கணம்
ரமணி சந்திரன்
இந்திரா செளந்தர்ராஜன்
பாலகுமாரன்
சுஜாதா
இவைகளே
ஆக்ரமித்திருந்திருந்தன.
உயிர்மை பதிப்பகம்
ஸ்டால் போடவில்லை.
நிறைய புத்தகம் வாங்க
திட்டம் போட்டிருந்தேன்.
ஏமாற்றம்..ஏமாற்றம்.
வாங்கியது சொற்பமே.

புத்தம் வீடு - ஹெப்ஸிபா ஜேசுதாசன்
சங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்
பகல் கனவு - ஜிஜூபாய் பதேக்கா
அருந்ததிராய் கரண்தாப்பர் விவாதம்
CRIME AND PUNISHMENT - FYODOR DOSTOEVSKY
THE WHITE TIGER - ARAVIND ADIGA
LADY CHATTERLEY'S LOVER - D.H.LAWRENCE

இவை வாங்கியது போக பட்ஜெட்டில்
மீதமுள்ளது.
உண்மையான புத்தகத் திருவிழாவை
எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.

சனி, 22 ஜனவரி, 2011

பிடிக்காத பத்து பேர்

01. புத்தகம் படிக்கவே நேரமில்லையென
பெருமையாய் சொல்லிக் கொள்பவர்.
02. காதுகளுக்குள் பவுடர் அடித்துக்
கொண்டு வருபவர்.
03. பார்த்த அடுத்த நிமிடமே அரசியல்
பேச ஆரம்பிப்பவர்.
04. குழந்தைகளை ரைம்ஸ் சொல்லச்
சொல்லி நிர்பந்திப்பவர்.
05. எல்லோரையும் தோழரென விளிக்கும்
போலி புரட்சிக்காரர்.
06. இந்தக் காலத்துப் பசங்களுக்கு என்ன
தெரியுமென அங்கலாய்ப்பவர்.
07. ஆகச் சிறந்தவை அனைத்தும் நம்
மொழியில் மட்டுமே என வாதிடும்
தமிழ் அன்பர்.
08. அம்பானி அடுக்கு மாடி கட்டினாலும்,
டாட்டா பேட்டா வாங்கினாலும்
கொந்தளிக்கும் போராளி.
09. நேரில் பேசும் போது மேலாடையைத்
திருத்திக் கொண்டெ பேசுபவர்.
10. எதிர்படும் அழகான பெண்ணுடன்
வரும் அவரின் கணவர்.