தேர்தல் வருகிறது. கண் முன்னே இரண்டு கட்சிகள். ஒன்று மற்றொன்று தோழர்களோ அம்மாவிடம் துண்டு ஏந்தி நிற்கிறார்கள். வாழ்வதற்கு ஏதேனும் வழி கிடைக்குமா ரஜினி மற்றும் விஜய் அவர்களே?
மீண்டும் ஒரு முறை சத்யஜித்ராயின் சாருலதாவைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. இந்த முறை சப் டைட்டிலுடன். கத்தி மேல் நடையல்ல; கத்தி மேல் ஓடியிருக்கிறார் ராய். இயக்குனரின் விரல்களுக்கு முத்தமிடும் ஆசை மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. எல்லா ஆசைகளும் நிறைவேறி விடுகிறதா என்ன?