புதன், 8 செப்டம்பர், 2010

மிஷ்கின் எனும் படிப்பாளி



மீண்டும் ஒரு முறை “அஞ்சாதே” படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதல் முறை பார்த்த போது ஏற்பட்ட உணர்வு நீர்த்துப் போகவில்லை.
படத்தைப் பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும்
இயக்குனர் மிஷ்கினைப் பற்றிச் சொல்ல்வே விருப்பம். முதல் படம்
சித்திரம் பேசுதடியில் நிறைய ஒளிக்கீற்றுகள் தென்பட்டன.
இரண்டாவது படம் அதை ஆமோதித்தது.
ருஷ்ய நாவலின் கதாபாத்திரத்தின் பெயரை புனைந்து கொண்டதில்
இருந்தே இவருக்கு இலக்கியத்தின் மீதுள்ள காதல் புரிகிறது.
திரைத் துறைக்கு வருவதற்கு முன் இவர் லேண்ட்மார்க் புத்தக
விறபனை நிலையத்தில் வேலை பார்த்துள்ளார். புத்தகம் படிக்கும்
ஆர்வத்திற்காக மட்டுமே.
இலக்கிய பின் புலம் உள்ளவர்கள் திரைத்துறையில் நிறைய
மாற்றங்கள் செய்யலாமென்பதற்கு இவர் ஓர் அடையாளம்.
இந்த இடத்தில் ஒரு வருத்தத்துக்குரிய செய்தியையும் சொல்ல
வேண்டியுள்ளது.
இவரது மூன்றாம் படமான “நந்தலாலா” இன்னும் திரையிடப்பட
முடியவில்லை. காரணம் நாம் அனைவரும் அறிந்ததே.
நம் சூப்பர் ஸ்டார்கள் எவரும் படத்தில் இல்லை.
பஞ்ச் வசனங்கள் இல்லை. ஏகப்பட்ட இல்லைகள்.

இதே மாதிரி பார்க்க முடியாமல் போன படங்கள்:

மகேந்திரனின் ”சாசனம்”.

பிரியதர்ஷனின் ”காஞ்சிவரம்”

மகனின் கடிதத்திற்காய் காத்திருக்கும் ஒரு கிரமத்துத் தாயைப் போல்
காத்திருக்கிறேன்.

5 கருத்துகள்:

சுந்தர்ஜி சொன்னது…

மிஷ்கினைப் பற்றி நான் அறிந்த அறியாத விஷயங்கள்.எதற்கும் பணியாது இலக்கை அடையும் துணிச்சல் எல்லாரிடமும் இருப்பதில்லை.அந்தத் துணிவை மிஷ்கினுக்குக் காலம் அருளட்டும்.சீக்கிரமே சாசனமும், காஞ்சிவரமும் பார்க்கக் கடவது என்று வரமளிக்கிறேன்.

சுசி சொன்னது…

சமீபத்தில தான் அஞ்சாதே பார்க்க முடிஞ்சது.. ரொம்ப நாள் எதிர்பார்ப்பு.. வீண் போகல..

rvelkannan சொன்னது…

எனக்கு தெரிந்து சாசனம் DVD OR CD கிடைக்கிறது. காஞ்சிவரம் விஜய் தொலைக்காட்சி சமீப காலங்களில் திரையிடுகிறார்கள். நந்தலாலா வின் பாடல்கள் கேட்டு கொண்டே இருக்கலாம். உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்பார்கிறேன் ...
மீஷ்கின் : இலக்கியம் சார்ந்தவர்களுக்கு கடல்ஆழம் பொறுமை இருக்கவேண்டும். இருக்கும்.
காலம் வரும் வரை காத்திருப்போம்.

கமலேஷ் சொன்னது…

தெரியாத தகவல்கள் நன்றி மது சார்.

Riyas சொன்னது…

//மகனின் கடிதத்திற்காய் காத்திருக்கும் ஒரு கிரமத்துத் தாயைப் போல்
காத்திருக்கிறேன்//

காஞ்சிவரம் இனையத்தில் பார்க்கலமே..

http://riyasdreams.blogspot.com/2010/09/blog-post_12.html