வெள்ளி, 10 செப்டம்பர், 2010

இன்றைய ....

தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்த்து
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடர்ந்திருந்த வழக்கை
உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது ஒரு
பாரட்டப்பட வேண்டிய தீர்ப்பு. இன்றைய நடுத்தர
வர்க்கம் மேட்டுக்குடி சிந்தனையைத் தத்து எடுத்துக்
கொண்டதாலேயே தன்னை மேட்டுக்குடியாக
நினைத்துக் கொண்டு தன்னளவில் ஒரு தத்துவத்தை
உருவாக்கிக் கொண்டுள்ளது. ஏற்றத்தாழ்வில்லாமல்
எல்லாக் குழந்தைகளும் ஒரே கல்வியைக் கற்பதா?
இந்த தத்துவத்தை கையிலெடுத்துக் கொண்ட
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நீதிமன்றம் சென்றிருக்கின்றன.
இத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதை வைத்துதான்
இதனை விமர்சிக்க முடியும். பொறுத்திருப்போம்.

***************************************************

இன்று காலையில் பின்பக்கம் அந்தச் சிறுவர்களைப்
பார்த்தேன். மூன்று சிறுவர்கள். அனைவரும் பத்து
வயதுக்குட்பட்டோர். ஏழ்மை உடையிலும், உருவத்திலும்.
குப்பை பொறுக்கிக் கொண்டிருந்தனர். படிக்க வேண்டிய
குழந்தைகள். மனசில் குற்ற உணர்ச்சியும், கோபமும்
நிரம்பி வழிந்தது. மீரா நாயரின் “ சலாம் பாம்பே “
ஞாபகம் வந்தது. எல்லாவற்றையும் சினிமாவுடன்
ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வது சரிதானா?

***************************************************

9/11 என்றால் 2001 ல் அமெரிக்காவில் நடந்த இரட்டைக்
கோபுர தாக்குதல் என்றாகிவிட்டது. அன்றிலிருந்து மிகச்
சரியாக 28 வருடங்களுக்கு முன்பு சிலியில் ஒரு
தாக்குதல் நடந்தது. அதன் விபரம் மிகச் சுருக்கமாக :

1971 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வென்று சால்வடார்
அலண்டே சிலியில் சோசலிச அரசை நிறுவினார். இரண்டே
ஆண்டுகளில் அவர் அமல்படுத்திய சோசலிச சீர்திருத்தங்களால்
நாடு வேகமாய் முன்னேறியது. ஆனால் அமெரிக்க உதவியுடன்
எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட போக்குவரத்துப் பணியாளர்
வேலை நிறுத்தம் நாட்டை ஸ்தம்பிக்க வைத்தது. சிலியின்
ஜனாதிபதி மாளிகை சி.ஐ.ஏ.வினால் குண்டுவீசி
தகர்க்கப் பட்டது, அதிபர் சால்வடார் அலேண்டெ படுகொலை
செய்ய பட்டதும் 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம்
தேதியில்தான். அமரந்தாவின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த
” பனியும் நெருப்பும் “ என்ற லத்தீன் அமெரிக்க சிறுகதை
தொகுதியில் இந்தச் செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது.

வரலாற்றில் இரண்டு நிகழ்வுகள். முன்னது மறக்கடிக்கப்
பட்டது. பின்னது நினைக்கப் படுகிறது.
அண்ணன் அமெரிக்காவின் கைங்கர்யம்.

3 கருத்துகள்:

சுசி சொன்னது…

நல்ல தகவல்கள் மதுமிதா.

சுசி சொன்னது…

நல்ல தகவல்கள் மதுமிதா.

ஹுஸைனம்மா சொன்னது…

எல்லாமே நல்லத் தகவல்கள். 9/11 - வரலாறு திரும்புகிறது (இன்னும் வீரியமாக)??