திங்கள், 20 செப்டம்பர், 2010

Udaan


ஹிந்தி திரைப்படம்.
சப்-டைட்டில் தயவில் பார்த்த படம்.
மிக அற்புதம் என்று சொன்னால் மிகையாகாது.
ரோஹன்.
ஹாஸ்டல் சுவரைத் தாண்டிக் குதித்து சினிமா
பார்க்கச் செல்கிறான் நண்பர்களுடன். அங்கே வார்டன்
அவர்களைப் பார்த்து விட பள்ளியிலிருந்து
விரட்டப் படுகிறான்.
எட்டு வருடங்கள் ஹாஸ்டலில் தன்னை வந்து
பார்க்காத தந்தையிடம் வந்து சேர்கிறான்.
அர்ஜுன் இன்னொரு பெண் மூலமாக அவன்
தந்தைக்குப் பிறந்த சிறுவன். இருவரும்
தாயை இழந்தவர்கள்.
ரோஹனுக்கு எழுத்தாளனாக வேண்டும் என்பது
கனவு. கவிதைகள் எழுதுகிறான்.
அவன் அப்பா சொல்கிறார். எழுத்தாளனாக
விட மாட்டேன். பட்டினி கிடந்து சாகப் போகிறாய்.
அவன் அப்பா சர்வாதிகாரி. அவரை பையன்கள்
சார் என்றுதான் அழைக்க வேண்டும்.
ரோஹனை பொறியியல் படிக்க வைக்கிறார்.
மீதப்பட்ட நேரத்தில் தன் ஃபேக்டரியில் வேலை
பார்க்க வைக்கிறார்.
சிறுவன் அர்ஜுனை தந்தை பெல்ட்டால்
அடிக்கிறார்.
தந்தை மூன்றாவது பெண்ணை திருமணம்
செய்ய ரோஹன் அர்ஜுனை அழைத்துக் கொண்டு
கவிதைகளுடன் மும்பை செல்கிறான்.
ஜனரஞ்சக பத்திரிக்கையில் வரும்
தொடர் போன்ற சாயலில் கதை இருந்தாலும்
சிறுவர்கள் நடிப்பில் பின்னுகிறார்கள்.
உதிரிப்பூக்களை கொஞ்சம் ஞாபகப் படுத்துகிறார்கள்.
அமித் திரிவேதி இசையில் சில உச்சங்களைத்
தொடுகிறார்.
படத்தில் அனுராக் காஷ்யப்பின் பங்கும் உள்ளது.
இவர் பிளாக் ஃபிரைடே,தேவ் டி போன்ற மிகச்
சிறந்த படங்களை இயக்கியவர்.
இப்படம் 2010 கேன்ஸ் திரைப்பட விழாவில்
பங்கு பெற்றது.
விக்ரமாதித்யா இயக்கியுள்ளார்.

பி.கு : இப்படத்தை தயவு செய்து தமிழ் படத்துடன்
ஒப்பிட்டுப் பார்த்து ஆதங்கப் பட வேண்டாம்.
காலமெல்லாம் ஆதங்கப் பட்டுக் கொண்டேயிருக்க
வேண்டும்.

3 கருத்துகள்:

rvelkannan சொன்னது…

போஸ்டரில் வித்தியாசம் தெரிகிறது. இந்த வாரத்தில் பார்த்து விடுகிறேன் பகிர்வுக்கு நன்றி

Ahamed irshad சொன்னது…

Nice Review.. thanks for sharing..

ரிஷபன் சொன்னது…

காலமெல்லாம் ஆதங்கப் பட்டுக் கொண்டேயிருக்க
வேண்டும்.

ஹா.. ஹா.. சரியான கிண்டல். படம் பார்க்கத் தூண்டுகிறது.