திங்கள், 13 டிசம்பர், 2010

அழுகல்



உ.பி. மாநிலத்தில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான
நிலத்தை சர்க்கஸ் கம்பெனிக்கு தற்காலிகமாக
வாடகைக்கு விடுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம்
உத்திரவிட்டுள்ளது. அதனை எதிர்த்து வக்பு வாரியம்
உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தது. இந்த
வழக்கை விசாரித்த நீதிபதிகள் வக்பு வாரிய நிலத்தை
சர்க்கஸ் கம்பெனிக்கு வாடகைக்கு விடுவது தொடர்பாக
அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
ரத்து செய்தது. அத்துடன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்
அழுகிப் போன விஷயங்கள் நடப்பதாகவும் அதனை
சுத்தம் செய்யும் நேரம் வந்துவிட்டதாகவும்
குறிப்பிட்டனர். அழுகிப் போன என்ற கருத்தை நீக்க
வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் சார்பாக
உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய
வார்த்தையை திரும்ப பெற மறுத்துவிட்டது.
நிற்க.
இதற்கு முன்பாக பாபர் மசூதி இடிப்பு வழக்கில்
ஒருதலை பட்சமாக இதே அலகாபாத் நீதிமன்றம்
தீர்ப்பளித்தத்தையும் கவனத்தில் கொள்ள
வேண்டியிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்திடம் கேட்பதற்கு ஒரு கேள்வி
உண்டு.
அழுகிப்போன விஷயங்கள் நடப்பது நீதிமன்றத்தில்
மட்டும்தானா?

3 கருத்துகள்:

Thanglish Payan சொன்னது…

Everywhere in the world.. :(

ரிஷபன் சொன்னது…

அழுகிப்போன விஷயங்கள் நடப்பது நீதிமன்றத்தில்
மட்டும்தானா?
அங்கேயும் தான் என்பதுதான் உறுத்தல்..

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

ரிஷபனோடு ஒத்துப் போகிறேன் மதுமிதா.