வியாழன், 16 டிசம்பர், 2010

ரத்த சரித்திரம்


முகத்தில் ரத்தம் தெறிக்கும் படம்.
மற்றுமொரு ராம்கோபால் வர்மா படம்.
முதல் படம் ஷிவாவில் கலக்கியது போல்
இதிலும்.
ஆந்திரா அரசியலில் எவ்வளவு ரத்தம்
கலந்துள்ளது என்பதை வெளிப்படுத்திய
படம். மிக வன்முறைப் படம் என்று
எல்லோராலும் முத்திரைக் குத்தப்பட்டாலும்
உண்மைக் கதை இதைவிட பலமடங்கு
ரத்தக் கறை படிந்தது.
பரிதலா ரவி என்பவரின் கதையை
காங்கிரஸ்,தெலுங்கு தேசம் கட்சிகள்
எப்படி புனைந்தன என்பதைப்
பார்க்கும் போது படம் உண்மைக்குத்
துரோகம் செய்யவில்லை என்றே
படுகிறது.
விவேக் ஓபராய் மிக நேர்த்தியாகச்
செய்துள்ளார்.
சாக்லேட் பையன் சூர்யா இன்னும்
போக வேண்டிய தூரம் இருக்கிறது.
அவர் இன்னமும் உக்கிரம்
பழகவில்லை.
ஓபராயின் மனைவியாக வரும்
ராதிகா ஆப்தே நடிப்பில்
மட்டுமல்ல அழகிலும் வசீகரிக்கிறார்.

6 கருத்துகள்:

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

ராம்கோபால் வர்மாவின் சினிமாக்களின் மீதான ஆர்வம் எப்போதோ குறைந்துவிட்டது.

ஆனால் உங்களின் இந்தப் பகிர்வு அணையப் போகும் திரியைத் தூண்டியது போல்.

நன்றி மதுமிதா.

சுசி சொன்னது…

:))

ரிஷபன் சொன்னது…

படம் பார்க்கல.. பெயர் மிரட்டியதால்.

Thanglish Payan சொன்னது…

Nice comments..

Surya innum poganuma?? i guess he justified his character. :)

ஹ ர ணி சொன்னது…

உனக்கு ஞாபகமிருக்கிறதா? முதன்முதலாக தமிழில் வெளிவந்த ராம்கோபால் வர்மாவின் என்னமோ நடக்கிறது படத்தை இருவரும் போய் பார்த்தது. உனக்குள் இருக்கும் பன்முகப் பார்வையின் விசாலத்திற்குள் சினிமாவை நீ பார்க்கும் பார்க்கும் மற்றவரிடமிருந்து ரசனையோடு உன்னை வேறுபடுத்துகிறது. தொடர்க. நன்றி.

Unknown சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com