சனி, 29 ஜனவரி, 2011

புத்தகத் திருவிழா !



தஞ்சையில் BAPASI நடத்தும் புத்தகத்
திருவிழா. சந்தோஷமாய் உள்ளே
நுழைந்தேன்.
மிளகாய் பஜ்ஜி
ஸ்டிக்கர் பொட்டு
இன்ஜினியரிங் காலேஜ்
இரு சக்கர வாகனம்
நான்கு சக்கர வாகனம்
டைல்ஸ்
ஸ்போர்ட்ஸ் குட்ஸ்
அப்புறம்
புத்தகம்.
வெறுப்பைக் கிளப்பிட்டாங்க.
கேட்காமலே காரணம்
தெரிந்தது.
நம்ப ஊர்ல புத்தகம்
வாங்க ஆள் ஏது?
ஆன்மிகம்
வாஸ்து
சுய முன்னேற்றம்
ஆங்கில இலக்கணம்
ரமணி சந்திரன்
இந்திரா செளந்தர்ராஜன்
பாலகுமாரன்
சுஜாதா
இவைகளே
ஆக்ரமித்திருந்திருந்தன.
உயிர்மை பதிப்பகம்
ஸ்டால் போடவில்லை.
நிறைய புத்தகம் வாங்க
திட்டம் போட்டிருந்தேன்.
ஏமாற்றம்..ஏமாற்றம்.
வாங்கியது சொற்பமே.

புத்தம் வீடு - ஹெப்ஸிபா ஜேசுதாசன்
சங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்
பகல் கனவு - ஜிஜூபாய் பதேக்கா
அருந்ததிராய் கரண்தாப்பர் விவாதம்
CRIME AND PUNISHMENT - FYODOR DOSTOEVSKY
THE WHITE TIGER - ARAVIND ADIGA
LADY CHATTERLEY'S LOVER - D.H.LAWRENCE

இவை வாங்கியது போக பட்ஜெட்டில்
மீதமுள்ளது.
உண்மையான புத்தகத் திருவிழாவை
எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.

10 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தங்களைப் போன்ற ஆர்வமான புத்தகப் பிரியர்கள், தெருவுக்கு ஒருவரோ அல்லது ஊருக்கு ஒருவரோ என்று ஆகிவிட்டது இன்றைய நிலை. அது கோபமாக உங்கள் பதிவில் நன்கு கொப்பளிக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆமை போல நம் வீடுகளுக்குள் நுழைந்து ஆக்ரமித்துள்ள தொலைகாட்சிப் பெட்டிகளும், வீட்டில் உள்ள நல்ல குடும்பப் பெண்களையே வில்லிகளாக மாற்றி வரும் சீரியல்களுமே. என்ன செய்வது?

Madumitha சொன்னது…

நன்றி சார்.
இது என் கோபத்தைப் புரிந்து கொண்டதற்கும், தங்களின்
முதல் வருகைக்கும்,
பின்னூட்டத்திற்கும்.

ரிஷபன் சொன்னது…

புத்தக ஸ்டாலில் கோலம், சமையல் ஜோசியம் இருந்து விட்டுப் போகட்டும். கூடவே நாம் தேடுகிற புத்தகங்களும் சரியான விலையில் கிடைத்தால் வாங்குகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

ரிஷபன் சொன்னது…

சிறுகதைத்தொகுப்பிற்கு பதிப்பாளரைத் தொடர்பு கொண்டபோது விலை மற்றும் கூடுதலாய் தொகை அனுப்பச் சொன்னார். 4 முறை தொலைபேசி புத்தகம் வாங்குவதற்குள் உன்பாடு என்பாடாகி விட்டது! இத்தனைக்கும் பிரபல பதிப்பாளர்கள்! அதே புத்தகம் 10% தள்ளுபடியில் நியூ செஞ்சுரி புக் ஹவுசில் பார்த்தேன் அதே நாளில். படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையே இவர்கள் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

ப்ரகாஷ் மட்டும் இல்லை. மற்றபடி தஞ்சாவூர் அப்படியேதான் இருக்கிறது. அப்படித்தானே மதுமிதா?

Madumitha சொன்னது…

ஆமாம் ரிஷபன்.
புத்தகம் கிடைத்தால் போதும் என்றாகிவிட்டது. இதில் எங்கே
சரியான விலை?
உங்கள் அனுபவமும்
வேதனைக்குரியதுதான்.

Madumitha சொன்னது…

ப்ரகாஷ் இல்லை.
அந்த இலக்கியச் சூழல் இல்லை.
தஞ்சாவூர் மாறிவிட்டது
வேறு வகையில் சுந்தர்ஜி.

r.v.saravanan சொன்னது…

மதுமிதா நான் சென்னையில் நடந்த புத்தக திருவிழாவில் வருடா வருடம் செல்வேன் புத்தகங்கள் வாங்குவேன் நான் தஞ்சாவூர் வரும் போதெல்லாம் உங்களை நினைத்து கொள்வேன்

Madumitha சொன்னது…

மிக்க நன்றி சரவணன்.

நிலாமகள் சொன்னது…

சந்தைப் படுத்தலில் உன்னதம் குன்றியவற்றுள் புத்தகமும் ஒன்றானது வருந்தற்குரியதே. ஜூன் - ஜூலை -யில் ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடக்கும் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு ஒரு முறை வருகை தாருங்களேன் ஐயா.