வெள்ளி, 5 மார்ச், 2010

இலவசம்

மீண்டுமொரு சாமியாரின் கதை.
இந்த முறை 65 உயிர்கள் பலி.
எந்த ஒரு விபத்து என்றாலும்
முதல் பலி பெண்களும்
குழந்தைகளுமே. அத்தனை ஆண்களும்
உயிர் பயத்தில் ஓடி விடுகிறர்களா?
இலவசத்திற்காய் இத்தனை
உயிர் பலி. இலவசத்திற்காய்
பொருட்கள் வாங்கியது போக
உயிர்களைக் கொடுக்கிறார்கள்.
இலவசத்திற்காய் அலையும்
மனப்பாங்கிற்குக் காரணம்
வறுமை மட்டுமா? நம்
அரசாங்கமும்தான். இங்கே
இலவசமாய் கிடைக்க வேண்டிய
கல்வி, மருத்துவம் இன்ன பிற
அடிப்படை தேவைகள்
தொடமுடியாத உயரத்திற்கு
போய்விட்டன. அரசாங்கத்தைப்
பொறுத்தவரை
ALL ROADS LEAD TO ELECTION
BOOTH.
இது குறித்து நாம் யோசிக்க
வேண்டிய தருணமிது.
வறுமையிலும் செம்மை.
இதுவே வறுமையிலிருந்து
விடுபட வைக்கும்
GOLDEN RULE.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மதுமிதா கவிதைகள் என்றும் ஏமாற்றம் தந்ததில்லை, இந்தக் கவிதையிலும்!