வெள்ளி, 19 மார்ச், 2010

தாய் மண்ணே வணக்கம்



யாழினி
இல்ல.. வியாஸ்..வேத வியாஸ்
யாழினி
வியாஸ்
சரி.யாழினியும் வியாஸூம்
தாங்காதுப்பா. நாலு நாள்ல டெலிவரி.போகத்தான் வேணுமா
ஜஸ்ட். ரெண்டே நாள். வந்துடுவேன்
அவன் தோள் தொடப்பட்டது
தாடிக்காரன்
ஹலோ கேப்டன் ..எங்க தேசம் தொட்டாச்சு
தெரியும். ஏன் இப்படி செஞ்சீங்க
உங்க ஆள் 140 பேர். எங்க ஆள் 5 பேர்.வியாபாரம் balanced ஆ இல்லே
140 பேரும் விமானப் பயணிகள். ஆனா உங்க 5 பேர்
வாக்குக் கொடுத்தமாதிரி பயணிகளை இறக்கிவிட்டோம்ல.அந்த 5
பேரும் செயல் வீரர்கள்
அடுத்தவர் தேசத்தில் குண்டு வைப்பது வீரமா
பிரச்சினை
பேசித்தீர்க்கலாமே
எத்தனை வருஷமா
நாங்கள் உங்களை விட பலசாலிகள்
உங்கள் விமான நிலைய அதிகாரிகள் மூன்று பேருக்கு
லஞ்சம். எவ்வளவு தெரியுமா? இது உங்கள் பலவீனம்
சரி. அடுத்து என்ன
நாங்கள் இறங்கியதும் உன்னை அனுப்பிடுவோம்
வெளியே ஆரவாரக் கூச்சல்
என்ன
அதோ அந்த உயரமானக் கட்டிடத்தைப் பார்
ம்
எங்கள் தலைமைச் செயலகம். அதிபர்,முக்யமந்திரிகள்,
செயல் வீரர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் கணத்தில் கேப்டன் துருவன் முடிவு செய்தான்.
விமானம் தாழ்ந்து மிக வேகமெடுத்தது.
ஏய்.. என்ன செய்றே
நாற்பதாவது நொடியில் விமானம்
பலத்தச் சப்தத்துடன் அந்தக் கட்டிடத்தைத் தீண்டியது.

1 கருத்து:

ஹ ர ணி சொன்னது…

Dear Madumithaa,

After long gap I have read a fine story. It is lovely. Harani.