ஞாயிறு, 14 மார்ச், 2010

கெளதம் வாசுதேவ மேனனுக்கு ....

தாமதமாகத்தான் ”விண்ணைத்தாண்டி வருவாயா” ப்
பார்த்தேன். சேட்டைச் செய்யாத சிம்புதான் படத்தின்
தரத்திற்கான சான்றாய் அனைவராலும் சொல்லப்படுவது
ஆச்சரியமூட்டுகிறது .
காதலும் காதலைச் சார்ந்த வலியும் எப்போதும்
சுவாரசியம் தான். ஆனால் ஒரு நல்ல படத்திற்கான
தகுதி அதுமட்டுமல்ல என்பது மேனனுக்கு
தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
காதலுக்கு மதம் தடை என்பது அரைத்து அரைத்துப்
புளித்துப் போன கரு.
இது இன்னமும் காதலர்களுக்கு நடந்துக்
கொண்டுதானிருக்கிறது எனும் சால்ஜாப்புகளைத்
தவிர்த்து விட்டுதான் பார்க்கவேண்டியிருக்கிறது.
கதை சொல்லும்விதம், படமாக்கும் விதம்,
வசனம் இன்னபிற விஷயங்களில்
செலுத்தும் புதுமையை
கதையிலும் காட்டலாம்.
பாராட்டப் பட வேண்டிய விஷயம்
கதைக்கு உதவியான
photography.
மேனனுக்கும் ஹாரிஸ் ஜெயராஜுக்கும்
இருந்த chemistry இந்த கூட்டணியில்
missing.
கடைசியாய் ஒன்று.
இரண்டு climax எடுத்திருந்தது
உண்மையென்றால்
சொல்லும் கதைக்கு அது
நேர்மையாகுமா?

1 கருத்து:

ரிஷபன் சொன்னது…

இன்னும் படம் பார்க்கல.. ரெண்டு முடிவுன்னா என்ன குழப்பமோ பாவம்..