வெள்ளி, 23 ஏப்ரல், 2010

திரு நாள்






இன்று உலகப் புத்தக தினம்.
இதை ஆசிரியர் தினமாகவும் கொண்டாடலாம்.
ஒவ்வொரு புத்தகமும் ஒரு ஆசிரியர்தானே?
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு நூலகம்.
இதை நடைமுறைப் படுத்தினால்
உலகில் பல நல்ல விஷயங்கள் தானாகவே
நடக்கும். இது குறித்த சிந்தனையை
பரவலாக்கினாலே போதும்.
நம் குழந்தைகளுக்கு புத்தகங்களின்
ருசியைக் காட்டிவிட்டால்
அவர்கள் விடமாட்டார்கள்.
தொலைக் காட்சி எனும் நோய்க்கு
புத்தகங்களே சிறந்த மருந்தாகும்.

இப்போதெல்லாம்
நூலகங்களில்
காற்று மட்டும்தான்
புத்தகங்களைப்
புரட்டிக்கொண்டிருக்கிறது.

மேலேச் சொன்ன கவிதையை
மாற்றி எழுதும் பொறுப்பு
நம் அனைவருக்கும் உண்டு.

நம்மைச் சுற்றிலும்
புத்தகங்கள் இறைந்து கிடப்பது என்பது
குழந்தைகள் சூழ வாழ்வது
போன்று சந்தோஷமானது.
கடவுளின் அருகில் இருப்பது
போன்று தைரியமானது.

நம் அனைவருக்கும்
கடவுளின் அருகாமையும்
குழந்தைகளின் நட்புமான
வாழ்க்கை அமையட்டும்.

1 கருத்து:

ஹேமா சொன்னது…

//நம்மைச் சுற்றிலும்
புத்தகங்கள் இறைந்து கிடப்பது என்பது
குழந்தைகள் சூழ வாழ்வது
போன்று சந்தோஷமானது.
கடவுளின் அருகில் இருப்பது
போன்று தைரியமானது.//

யதார்த்த உணர்வு மது.
புத்தகம்போல ஒரு நண்பன் வேறு யார் !