சனி, 24 ஏப்ரல், 2010

கேள்விகளை முன் வைத்து ஒரு கேள்வி


பலூன்கள்
உடைபடுவதில்
உடன்பாடுடைய
ஒரு
குழந்தையையேனும்
எவராவது
சுட்டிக் காட்டுதல்
சாத்தியமா?

கேள்விகளுக்காய்
தவழ்ந்து
செல்ல முடிவதில்லை
பதில்களின்
குகைக்குள்.

கேள்வி
தவிர்த்து
நடந்தால்
தட்டுப்படக்
கூடுமோ
பதில்கள்?

4 கருத்துகள்:

Ahamed irshad சொன்னது…

//கேள்வி
தவிர்த்து
நடந்தால்
தட்டுப்படக்
கூடுமோ
பதில்கள்?//

எப்படிங்க தட்டுபடும். கவிதை அருமை...

ஆக நீங்க ரொம்ப "கேள்வி" கேட்கரவராக்கும்.......!?

Madumitha சொன்னது…

அய்.. நல்ல கேள்வி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//கேள்வி
தவிர்த்து
நடந்தால்
தட்டுப்படக்
கூடுமோ
பதில்கள்?//

நிச்சியமாய்.... (சொந்த அனுபவம்)

ஹேமா சொன்னது…

//கேள்வி
தவிர்த்து
நடந்தால்
தட்டுப்படக்
கூடுமோ
பதில்கள்? //

ம்ம்ம்....பரீட்சித்துப் பார்த்தால் நல்லதுதான் !