சனி, 24 ஏப்ரல், 2010

லெமன் ட்ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்


நண்பர் கேபிள் ஷங்கரின் சிறுகதை தொகுதி
” லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்”
நாகரத்னா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.
13 சிறுகதைகள்.

எனக்குப் பிடித்த வரிசை :
1. தரிசனம்
” தேர்ந்த திரைக்கதை தான் தரிசனம் “.
மிகப் பெரிய விஷயத்தை
மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறார்.
2. என்னை பிடிக்கலையா?
” அங்கீகாரம் தானாக் கிடைக்கணும். கேட்டு வாங்கக் கூடாது.
காதலியா இருந்தப்பக் கிடைச்ச இம்பார்டென்ஸ், மனைவியாகிவிட்ட
பிறகு எதிர்பார்க்கக் கூடாதா?”
கணவர்களுக்கான Golden Rule.
3. காமம் கொல்
” ரொம்பக் குளிராயிருக்குல்ல”
சாமியாரும் மனுஷந்தான் என்பது மீண்டும் மீண்டும்
நிரூபணமாகிறது.
4. நண்டு
“.........” என்றவனின் குரல் கரகரவென்று தொண்டைக் கட்டியிருந்தது.
கதை ஒரே நேரத்தில் மகேந்திரனையும்,சுஜாதாவையும் ஞாபகப்
படுத்தியது.
5. ஒரு காதல் கதை.. இரண்டு க்ளைமாக்ஸ்
இரண்டும் எதிர்பாராத twist.
6. முத்தம்
அவள் முத்தமிட்ட உதடுகளில் வலித்தது
மனசும் வலித்தது..
7. கல்யாணம்
இது கூட ஒரு வலியைச் சொன்ன கதைதான்
8. ராமி,சம்பத்,துப்பாக்கி
“ டுமீல்” என்று லைட்டர் வெடித்தது.
செம விறு விறுப்பு.
9. லெமன் ட்ரீயும்,இரண்டு ஷாட் டக்கீலாவும்
“யாது ஊரே யாவரும் கேளீர் “ ஆசாமிக்கு 70 வயசா?
வித்யாசமான கதை.
10.ஆண்டாள்
11. மாம்பழ வாசனை
12. போஸ்டர்
13. துரை..நான்..ரமேஷ் சார்
கொஞ்சம் முயன்றிருந்தால் இன்னும் நல்லாச் செய்திருக்கலாம்.
அட்டைப் படம் மிக அருமை. அச்சு அமைப்பும் மிக நன்று.

இனி எழுத வருபவர்கள் சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல்
எழுத முடியாது என்பது நிஜம்தானோ? இதைப் பாராட்டாத்தான்
சொல்கிறேன்.
சங்கர் நாராயண் இணைய எழுத்தாளர்,குறும்பட இயக்குனர்,திரைகதையாசிரியர்,
நடிகர்.
இவருடையப் புத்தகத்தை வாங்க,இவரை படிக்க :

http://cablesankar.blogspot.com