வெள்ளி, 2 ஏப்ரல், 2010

மருதாணி



பச்சையில்
எவ்விதம்
சிகப்புச்
சாத்தியமாயிற்று.
சின்ன வயசுக்
கேள்விக்கு
இன்னமும்
பதில் இல்லை.
தயவு செய்து
தாவரவியல்
நிபுணர்கள்
முயற்சிக்க
வேண்டாம்.
ஆணாயிருப்பதில்
நிறையச்
சலுகைகளும்
சவுகரியங்களும்
இருந்தாலும்
மருதாணியிட்ட
விரல்களைப்
பார்க்கும்போதெல்லாம்
பெண்ணாய்
பிறந்திருக்கலாமென
மனசு
சலனப்படுவதைத்
தவிர்க்கமுடிவதில்லை.

2 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

ஆம்பளைங்க மருதாணி போடக்கூடாதுன்னு யாரும் சொல்லலைங்களே... நானே போட்டிருக்கேன்...

கவிதை ஏக்கத்தின் பிரதிபலிப்பு... நல்லாருக்கு....

சுந்தர்ஜி சொன்னது…

மருதாணியை விடுங்கள். அவர்களுக்கேயான சௌந்தர்யங்களும்-சுகந்தங்களும் எந்த மலரில் கிடைத்துவிடும்?மருதாணி மணம் பரவுகிறது இந்தப் பக்கம்.