செவ்வாய், 6 ஏப்ரல், 2010

மழை குறித்த அபிப்ராயங்கள்


சிறு வயதில்
தோழனாய்

இளம் வயதில்
உள்ளங்கவர் கள்ளியாய்

மத்ய வயதில்
நடைபாதைக் குழந்தைகளின்
துயில் கலைக்கும்
ராட்சஷனாய்

முதிய வயதில்
கைப் பிடித்து
அழைத்து போகும்
மரண தேவதையாய்.

மாறிக் கொண்டேதான்
இருக்கிறது
மழை குறித்த
அபிப்ராயங்களும்.

4 கருத்துகள்:

அன்புடன் மலிக்கா சொன்னது…

மழை மழையில் தேகத்தை நனையவிட்டு அடிக்கும் ஆட்டம் அதற்காக மழைவேண்டி..

நல்ல கவிதை

சுந்தர்ஜி சொன்னது…

நீங்கள் தொடர்ந்து எழுதுவது சந்தோஷமாய் இருக்கிறது மதுமிதா. மழை குறித்த அபிப்பிராயங்கள் மாறினாலும் மாறாதிருப்பது உங்கள் பார்வையும் எழுதுமுறையும்.இந்தக் கவிதையும் அப்படித்தான்.

nela சொன்னது…

mazhai nalaerththu nam parkkum valaiel nadakkum negazugal nam karuthuklai marukenrathu

இரசிகை சொன்னது…

very nice mathumithaa........!