செவ்வாய், 20 ஏப்ரல், 2010

யாதுமாகி


மகத்துவமாய்
குலுங்கும்
துளசி.
சிகப்பாய்ச்
சிரிக்கும்
செம்பருத்தி.
உறங்கும் முன்
பேசிப் போகும்
நிலா.
மனசையும்
சேர்த்து நனைக்கும்
மழை.
பாதங்களைத்
தொட்டு
ஆசிர்வாதம்
வாங்கும்
அலை.
யாதுமாகி
நீ
நின்றாய்
பெண்ணே.