செவ்வாய், 13 ஏப்ரல், 2010

வெள்ளித்திரை X சின்னத்திரை




Vs.





போன வாரம் படம் பார்க்கத்
தியேட்டருக்குப் போனேன்.
நூறூ ரூபாய் நோட்டை
நீட்டினேன். முறைத்தார்
டிக்கெட் கொடுப்பவர்.
நூற்றைம்பது ரூபாயாம்.
எங்க ஊரில் இந்தத் தொகை
மிக அதிகம். சுற்று முற்றும்
பார்த்தேன். கூட்டமுமில்லை.
விசாரித்ததில் தெரிந்தது.
டிக்கெட் விலையை தியேட்டர்
உரிமையாளரே நிர்ணயம்
செய்து கொள்ளலாமாம்.
அரசு அனுமதி
கொடுத்திருக்கிறதாம்.
பகல் மற்றும் இரவுக்
கொள்ளை.
முன்பெல்லாம்
தியேட்டர் வாசலில்
ஒரு போலிஸ்காரர்
நிற்பார். பிளாக்கில்
டிக்கெட் விற்பதைத்
தடுக்க என்பதை
நினைவில் கொள்க.
உள்ளே போனால்
ஏஸி தியேட்டர் ஆதலால்
ஃபேன் போடமாட்டார்கள்.
ஏஸியும் கூட.
முதுகில் மூட்டைப்பூச்சிக்
கடிக்கும்.
கழிவறை நாறும்.
கொறிக்கக் கொடுக்கும் காசில்
கிராமத்தில் ஒரு
பிளாட் வாங்கிப் போடலாம்.
படத்தைப் பார்க்கும் போது
நல்லாப் பொழுது போகும்.
எந்தெந்தப் படத்திலிருந்து
சீனை உருவியிருக்கிறார்கள்
என்று கணக்குப்
போட்டுக்கொண்டேயிருக்கலாம்.
படம் முடிந்து
வேர்க்க வியர்க்க
வெளியே வந்தால்
எல்லாப் படங்களின்
வட்டத் தகடு.
ரூபாய் இருபது மட்டுமே.
இப்ப நான் என்ன செய்வது?

1 கருத்து:

சுந்தர்ஜி சொன்னது…

அனுபவிப்போம் நேர்மையின் பரிசை வியர்க்க விறுவிறுக்க.