
பறக்கும்
தட்டிலிருந்து
வந்திறங்கியவள்
ஜாடையில்
பெண்ணைப்
போலிருந்தாள்.
விசாரித்ததில்
தெரிந்தது.
அவள்
கடவுளைத்
தேடி வந்ததாக.
இங்கே
தனியாகக்
கடவுள்
என்று
எவருமிலர்.
என் பதில்
கேட்டு
வியந்தவளிடம்
சொன்னேன்.
ஏனெனில்
இங்கே
சாத்தான்களும்
இல்லை.
நம்பிக்கை
இல்லாமல் தான்
புறப்பட்டுச்
சென்றாள்
அந்த
பூமிப் பெண்.
5 கருத்துகள்:
அவங்கள ஏன் போக விட்டீங்க ?ஒருவேளை அவங்க கடவுளா கூட இருந்திருக்கலாம்
ஓ....சாத்தான்கள் இருக்குமிடம்தான் கடவுள் இருக்குமிடமோ !
கவிதை தரும் நீங்கள்கூடக் கடவுள்தானே !
நான் ஊரில் இல்லாத போது நடந்திருக்கிறது எல்லாக் கூத்தும்.
வேடிக்கை தாண்டி அருமை மதுமிதா.
அவளுக்கும் நம்பிக்கை இல்லியா?!
வித்தியாசமான சிந்தனை..
கருத்துரையிடுக